• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கல்

June 3, 2021 தண்டோரா குழு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக, வெங்காயம், தக்காளி,கேரட் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வரும்,தி.மு.க.தலைவரும் ஆன மறைந்த மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒண்றிணைவோம் எனும் திட்டத்தில் கழக தொண்டர்கள் உதவும் நோக்கில் செயல்பட முதல்வர் ஸ்டலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை தியாகி குமரன் மொத்த காய்கனி மார்க்கெட் வியாபரிகள் சங்கம் சார்பாக வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகு,கேரட்,பீட்ரூட் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கும் விழா டி.கே.மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில்,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் கருதி,காய்கறி தொகுப்புகளை அந்தந்த பகுதிகளுக்கே சென்று வழங்க உள்ளதாக சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்செயலாளர் பாபு,சித்திக்,பதுரு, ஆஷிக் அலி,மற்றும் பெரியகடை வீதி பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மார்க்கெட் மனோகரன், முத்து முருகன்,மார்க்கெட் ராமு,சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க