• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பெரியகுளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

June 2, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 1295 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் ஆகாயத்தாமரை படர்தல், கழிவு நீர் கலத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன.

இந்தநிலையில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பெரிய குளத்தின் கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஏற்கனவே கொரோனா நோய்தொற்று அதிகம் உள்ள சூழலில் நகரின் மையப்பகுதியில் உள்ள குளக்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது நோய்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க