• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கோவை இ.எஸ்.ஐ., டீன்

June 2, 2021 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ., டீன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியான பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு தெரிவித்து டீன் ரவீந்திரன் விளக்கம் அளித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன்,

30 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஊட்டியில் பணி உயர்வு பெற்று பணியாற்றி, பின்பு, பணி மாறுதலாகி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறேன். நான் வந்த பிறகு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 140 ஆக குறைந்துள்ளது. 530 ஆக இருந்த படுக்கை வசதிகளை ஆயிரத்து 250 படுக்கைகளாக 90 நாட்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியினார்.

மேலும், உயிரை கொடுத்து சொந்த மருத்துவமனை போல் நினைத்து பணியாற்றி வருவதாகவும், அவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட பத்திரிக்கை ஒரு குற்றச்சாட்டு வெளியிடுவதாகவும், எதுவாக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்போம் என்றார். அதில், சடலத்தை எடுக்க ரூ.3 ஆயிரம் கேட்பதாக தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்னரிமை அடிப்படையில் பணி பெற்றபோது, முன்னாள் அமைச்சர் தயவால் பணி ஆணை பெற்றதாக செய்தி வெளியிட்டது மன வேதனை அடைந்ததால் இந்த விளக்கம் அளிக்கிறேன்.

இதுதொடர்பாக பிரஸ் கவுன்சில் செல்ல உள்ளேன் என்றவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் PAID ATTENDERS அல்லது HOME NURSE முறை உரிய அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுவதாகவும், ஆள் பற்றாக்குறையால் தான் இது அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க