• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை வைசியாள் வீதி தர்மராஜா கோவில் பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீர் விநியோகம்

June 2, 2021 தண்டோரா குழு

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக கோவையில் கொரோனா பரவல் மிக தீவிரம் காட்டி வரும் நிலையில்,கோவை வைசியாள் வீதி தர்மராஜா கோவில் அருகே ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ சிவசண்முக பாபுஜி சுவாமிகள் ஏற்பாட்டில், பாஜக உக்கடம் மண்டல் தலைவர் சேகர் தலைமையில், கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 1000 பேருக்கு முக கவசமும் வழங்கப்பட்டது.

கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கபசர குடிநீரை வாங்கி பயன்பெற்றனர்.நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கண்மணி பாபு, மோகனா அதிமுக பகுதி கழகச் செயலாளர் கணேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரி கிரீஸ், முன்னாள் கவுன்சிலர் கீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க