• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி

June 1, 2021 தண்டோரா குழு

கோவையில் கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி ஆணையாளர் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் குமார்வேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமாரிப்புத்துறை, அரசு முதன்மை செயலாளரின் கடிதம் படி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களை மாநகராட்சி பகுதியில் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க