• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

May 28, 2021 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை அமைச்சர்கள் சக்ரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் நோயாளிகளுக்கு தனிமை மையங்கள் மற்றும் படுக்கை வசதி கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஜூவல் ஒன் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதனை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது குறித்து, எமரால்டுஜூவல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,

இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கூடிய இந்த மையத்தில் அனுமதிக்கபடும்,கொரோனா நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு,அவர்களது மன நலம் பேணுதல்,அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் இம்மையம் தனிப்பட்ட சுவனம் செலுத்த உள்ளதாகவும் மேலும் இங்கு படுக்கை வசதி , ஃபேன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தில் கூடுதலாக நவீன வை ஃபை , DTH , புரொஜக்டர் வசதிகள் , செல்போன் சார்ஜிங்பாயிண்ட்ஸ் , விளையாட்டுகள் முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க