• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காந்திபுரத்தில் கொரோணா பேரிடர் உதவி மையம் துவக்கம்

May 27, 2021 தண்டோரா குழு

கோவையில் தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை மாநகரின் பல பகுதிகளில் கொரானா பேரிடர் உதவி மையங்களை துவங்கி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல சேவைகளை செய்து வருகிறது.அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து கொரோணா பேரிடர் உதவி மையத்தை , காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்வினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் ,P.R. நடராஜன் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M. I. அப்துல் ஹக்கீம், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன்,பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர் A. அன்வர் உசேன், SDPI மாவட்ட தலைவர் K. ராஜா உசேன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர்கள், உபைதுர் ரஹ்மான் , முஜீபூர் ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உதவி எண்கள்.
99 525 79 108.,
994 07 66 109

மேலும் படிக்க