• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டிகள் வழங்கல்

May 26, 2021 தண்டோரா குழு

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டுக்கென ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு சுமார் 3 இலட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டுகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி வழிகாட்டுதலின் பேரில்,தேசிய அமைப்புச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில், நடைபெற்ற இதில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் எஸ். கே. எம் சுரேஷ்குமார், மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில் குமார் ஆகியோர் இஎஸ்ஐ மருத்துவமனை
டீன் மருத்துவர் ரவீந்திரன் மற்றும் சூப்பிரண்டென்டென்ட் டாக்டர் ரவிக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக வழக்கமாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.அதே போல மருத்துவமனை வளாகம்,பேருந்து நிலையம்,போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை தொழிலாளர் குடும்பங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியை நேரு நகர் அரிமா சங்கம் செய்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க