• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

May 26, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்திள்ள நிலையில் கோவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நோயால் பாதிக்கப்படுவோர் போதிய படுக்கை வசதி இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியண் ,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் சாரதா டெர்ரி மற்றும் குழுமங்களின் தலைமை மேலாண் இயக்குனர் கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரன், சஞ்சனா விஜயகுமார், விக்ரம், கிருத்திகா விக்ரம், நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க