• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் பணியில் 1,500 பணியாளர்கள்

May 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறப்பாக தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர்.

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சளி, காய்ச்சல் கண்டறியும் பணியுடன் பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடா பொதுமக்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடும் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு 2 பேருக்கு ஒரு ஆக்சி மீட்டர் வீதம் வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்கள் பொதுமக்களின் விரலில் ஆக்சி மீட்டரை பொருத்தி ஆக்சிஜன் அளவை கணக்கிடுவார்கள். ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க