• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் பணியில் 1,500 பணியாளர்கள்

May 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறப்பாக தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர்.

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சளி, காய்ச்சல் கண்டறியும் பணியுடன் பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடா பொதுமக்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடும் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு 2 பேருக்கு ஒரு ஆக்சி மீட்டர் வீதம் வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்கள் பொதுமக்களின் விரலில் ஆக்சி மீட்டரை பொருத்தி ஆக்சிஜன் அளவை கணக்கிடுவார்கள். ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க