• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனை தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

May 17, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 9 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தர பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். தாங்கள் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனம் தங்களுக்கு எவ்வித குறையும் வைக்கவில்லை என்றும் தங்களின் உரிமையை தான் முன்வைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அதிகமான வேலைகளை நாங்கள் செய்து வருவதால் எங்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவமனை இருப்பிட முருத்துவர் பொன்மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க