• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு காரணமாக மதுபானங்களை வாங்க குவிந்த மதுபிரியர்கள்

May 9, 2021 தண்டோரா குழு

ஊரடங்கு காரணமாக மதுபானங்களை வாங்க குவிந்த மதுபிரியர்கள், வங்கி அட்டைகள் பயன்படுத்த முடியாததால், ஏ டி எம் வாசலில் வரிசையில் நின்று பணம் எடுத்துவிட்டு மதுபானம் வாங்குகின்றனர்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நாளை முதல் 24 ஆம் தேதி வரை அமுலுக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இருவாரங்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள எலைட் மதுபான கடையில் , வெளி நாட்டு மது வகைகளை வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

கொரொனா தொற்று காரணமாக ஒரே நேரத்தில் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மதுபிரியர்களிடம் பணம் மட்டுமே வாங்கப்படுவதால்,வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாமல்,வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் ஏ டி எம் மில் கூட்டமாக வரிசையில் நின்று பணம் எடுத்து , மது வாங்குகின்றனர்.

வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதை போல,மதுபானங்களை மதுபிரியர்கள் அள்ளிச்செல்கின்றனர். மதுபானம் வாங்க நீண்ட வரிசையில் மணிகனக்கில் காத்திருக்கும் குடிமகன்கள்,யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

மேலும் படிக்க