• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநில அரசு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோர்களுக்கு கடன் – தமிழக முதல்வருக்கு காட்மா கோரிக்கை

May 7, 2021 தண்டோரா குழு

மாநில அரசு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க தமிழக முதல்வருக்கு காட்மா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் (காட்மா) சங்க தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும். மேலும், தொழில் முனைவோர்களை மிக கடுமையாக பாதிக்கும் மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி மூலப்பொருள் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இது போன்ற தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தொழில் மற்றும் தொழில்முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என தொழில்முனைவோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க