• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மத்திய அரசை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

April 30, 2021 தண்டோரா குழு

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாப நோக்கை கைவிட்டு உயிருக்கு முன்னுரிமை கொடு.அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும்.வசதிபடைத்தவன் வாழ்வான் என்ற விதி ஒழியட்டும்.தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக்குழு அறைகூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதியாக கோவையில் வாலிபர் சங்கத்தினர் பரவலாக கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இருகூர், கணபதி, சிவானந்தபுரம், பெரிய நாய்க்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், சூலூர் தாலூக செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.

மேலும் படிக்க