• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் – மத்திய அரசின் உத்தரவால் தரமான தங்க நகைகள் கிடைக்க வாய்ப்பு

April 30, 2021 தண்டோரா குழு

இந்தியாவில் விற்கப்படுகின்ற தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் பதியப்பட வேண்டும் என்று பல்வேறு நுகர்வோர் தரப்பிலும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்து வந்தது. மத்திய அரசு இதனை அமல்படுத்த முடிவு எடுத்தது, இதற்கு பல்வேறு நகை வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்ற அனைத்து நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம் பெற வேண்டும்.இதுதொடர்பாக அந்தந்த நகை வியாபாரிகள் இந்திய தர நிர்ணய அமைவனனதில் (பி.ஐ.எஸ்) பதிவு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 2 கிராம் முதல் விற்கப்படுகின்ற அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு கூறுகையில்,

‘தமிழகத்தில் விற்கப்படுகின்ற சில தங்க நகைகள் மீது ஏராளமான புகார்கள் நுகர்வோர் அமைப்புகளுக்கு வருகின்றன. அவ்வாறான தங்கங்களை பரிசோதனை செய்வதற்கு போதிய ஆய்வுக்கூடங்கள் கோவையில் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே தங்க நகை பரிசோதனை மையம் உள்ளது. அதுவும் போதிய விளம்பரம் செய்யாததால் பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது. இதனால் தங்கத்தில் கலப்படம் மற்றும் தரம் குறைவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.

தற்போது மத்திய அரசு பிறப்பித்த இந்த உத்தரவால் தங்க நகை வாங்குபவர்களுக்கு தரமான நகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நகைகளை அதன் தரத்தை பரிசோதனை செய்ய இந்திய தர நிர்ணய அமைவனம் கூடுதல் பரிசோதனை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக பொதுமக்கள் அறியும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க