April 24, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி,
*தியேட்டர்கள், பார்கள் மூடல்
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதியில்லை.
*புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.
*அனைத்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயம்
*இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
*பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
*சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
*உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி – அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50 பேர் மட்டுமே அனுமதி.
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி – தமிழக அரசு.
*இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
*வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி