• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து திருப்பிகொடுத்த மாவட்ட காவல் கண்கணிப்பாளர்

April 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொதுமக்களிடம் செல்போன்களை வழங்கினார்.
திருடுபோன விலையுயர்ந்த 50க்கு மேற்பட்ட செல்போன்கள் பொதுமக்களிடம் கொடுப்பட்டது.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல் கண்கணிப்பாளர்,

இதுவரை 1660 செல்போன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருடுபோன செல்போன்கள் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவும் மாவட்டத்தில் இன்னும் 400 செல்போன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்கள் தாமக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.திருடுபோகும் செல்போன்கள் மூலம் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க