• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் 24ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு

April 13, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் 24ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக்கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்தது.சுனில் அரோராவைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார்.தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்கிறார்.

இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார்.இவர் கடந்த பிப்ரவரி 15 2019இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க