• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெயில் !

April 13, 2021 தண்டோரா குழு

பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

யூனிவர்சல் பாஸ் என்றழைப்படும் கிறிஸ் கெயில் கடந்த 13 வருடங்களாக ஐபிஎலில் 133 ஆட்டங்களில் விளையாடி 4800 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோக்ஸின் முதல் ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்தார்.

இதையடுத்து ஐபிஎல் போட்டியில் 350 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.ஐபிஎல் போட்டியில் கெயில் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும் 3-வது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க