• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4 பேருந்துகளில் பயணிகள் நின்று பயணித்ததால் அபராதம் விதிப்பு

April 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்த 15 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பேருந்துகளில் பயணிகள் நின்று பயணித்ததால் 4 பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம்விதித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

பின்னர் மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கில் பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த உணவகங்கள், பேக்கரிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம்அணிகின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட அவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க