• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் – மாநகராட்சி கமிஷனர் தகவல்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக கொரானா பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று சமூக வலைதளங்களில் கோவை மாநகராட்சி சார்பாக முககவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என பரவியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபொழுது,முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணிய வில்லை என்றால் ரூபாய் 200 மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க