• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை – கமல்

March 28, 2021 தண்டோரா குழு

கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் இன்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படுவதால் மக்களின் பிரச்சனைகளை எளிதாக நான் அறிந்து கொள்ள முடியும். நான் எப்போதும் மக்களின் இதயத்தில் இருக்கிறேன். நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்.

100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை என்றார்.

மேலும் படிக்க