• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை – கமல்

March 28, 2021 தண்டோரா குழு

கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் இன்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படுவதால் மக்களின் பிரச்சனைகளை எளிதாக நான் அறிந்து கொள்ள முடியும். நான் எப்போதும் மக்களின் இதயத்தில் இருக்கிறேன். நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்.

100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை என்றார்.

மேலும் படிக்க