• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ லியோனி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த கார்த்திகேய சிவசேனாதிபதி

March 27, 2021 தண்டோரா குழு

ஐ லியோனி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவித்துள்ளார்.

கோவையில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஐ லியோனி பெண்கள் குறித்து பேசியது சர்ர்சைக்குள்ளானது.இந்நிலையில் இன்று தொண்டாமுத்தூர் தொகுதி க்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

தான் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்ளவதாகவும் நாட்டு மாட்டினை என்னுடன் இணைத்து தெரிவிக்க பேசிய அவர் நாட்டு மாட்டுப்பால் நல்லது என கூறியிருக்கலாம் அதைவிடுத்து அந்த உதாரணம் தேவையற்றது என வருத்தத்தை பதிவு செய்தார். மேலும் அன்றே அவர் பேசும் போது நான் கையை பிடித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலுமணி தமிழ் சமூகத்திற்கு எதிரானவர் என்றும் எடப்பாடியாரிடம் கூட யதார்த்தம் ஒரு ஓரத்தில் இருக்கிறது. ஆனால் வேலுமணி எடப்பாடியை விட அதிகம் கொள்ளையடித்தவர் என விமர்சித்த அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் தொண்டாமுத்தூர்க்கு செய்ய உள்ள வாக்குறுதிகளை தெரிவிக்கும் போது வேளாண் சுற்றுலா ,திராட்சை மதிப்பு கூட்டு தொழிற்சாலை,அரசு பாலிடெக்னிக் கல்லூரி , மருத்துவமனை தரம் உயர்த்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத விமான விரிவாக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அவர் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றது குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க