March 26, 2021
தண்டோரா குழு
கோவை நேரு கல்வி குழும நிறுவனங்களின் சார்பாக அதன் ஒரு மைல்கல்லாக ரூ.15 கோடி மதிப்பீட்டிலான வணிக பொறிப்பக திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
கோவை நேரு குழும தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பொறிப்பகத்தை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் அங்கீகாரம் செய்துள்ளது.
துவக்க விழாவில், தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறையின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகதலைவர் மற்றும் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் அனிதா குப்தா கானோலி காட்சி மூலம் துவக்கிவைத்தார். மேக் கன்ட்ரோல்ஸ் அன்ட் சிஸ்டம்ஸ் பி லிமிடெட் துணைத்தலைவர் கே. தில்லை செந்தில் பிரபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈடிடிஐ அகமாதாபாத், திட்ட இயக்குனர் எஸ்.பி சரீன் சிறப்புரையாற்றினார்.
இந்திய மகளிர் தொழில் முனைவோர் அமைப்பின் நிறுவனர் திருமதி. மகாலட்சுமி சரவணன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ்,நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 32 புதுமை படைப்பாளர்கள், புதிய நிறுவன தொழில் முனைவோர் பங்கேற்றனர். பொறிப்பகத்தின் இயக்குனர் டாக்டர் பி. வைகுண்டசெல்வன் அனைவரையும் வரவேற்றார். மேலாளார் வி. சத்திய மூர்த்தி நன்றி கூறினார்.