• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூலப்பொருட்களின் விலையை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிர்ணயம் செய்ய தொழில் துறையினர் வலியுறுத்தல்

March 4, 2021

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதன் ஒருங்கின்ணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:

மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, சிறு,குறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மூலப்பொருட்கள் விலையை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

குறுந்தொழில் முனைவோர்கள் செய்து கொடுக்கும் ஆர்டர்களுக்கு, உற்பத்தி நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அதற்கான தொகையை தர வேண்டும். சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் முனைவோர்கள் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகின்றனர். எனவே கோவையின் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். அதில் அரசு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி தரவேண்டும். மேலும் மானிய விலையில் தொழிற்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகள் 8 சதவீதம் வட்டியில் கடன் வழங்க வேண்டும். அதனை திருப்பி செலுத்த 15 வருடம் அவகாசம் அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க