• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது – சுஷ்மா சுவராஜ்

November 19, 2016 தண்டோரா குழு

“சிறுநீரகங்களில் மத அடையாளம் கிடையாது” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக பாதிப்பினால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

இந்நிலையில் சிறுநீரகம் தொடர்பாக நன்றி தெரிவித்து சனிக்கிழமை டுவிட்டர் மூலம் சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சுஷ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.

அவர்களில் நியமத் அலி ஷேக், ஜான் ஷா, முஜிப் அன்சாரி ஆகியோர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தங்களது சிறுநீரகங்களைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இதை ட்விட்டர் மூலமாக வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர்.

இவர்களில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, ‘நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்குத் தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சனிக்கிழமை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், “மிக்க நன்றி சகோதரர்களே, சிறுநீரகத்துக்கு மத முத்திரை எதுவும் கிடையாது என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிறுநீரகத்தைத் தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த சுஷ்மா ஸ்வராஜ், “மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன்” என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

மேலும் படிக்க