• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுபான கடத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை

March 2, 2021 தண்டோரா குழு

மதுபான கடத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக உதவி மேலாளர்(கணக்கு) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை வடக்கு சரிதா (தொலைப்பேசி எண்- 9788177068), கோவை தெற்கு லட்சுமி (9344121629) ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமனம். துணை ஆட்சியர் கனகராஜ் (9445029759) தலைமையில் பறக்கும் படை அமைப்பு. பறக்கும் படையில் இளநிலை உதவியாளர்கள் மகேஸ்பாபுசிங் (9843415501), பாலமுருகன்(9842135622), ஜாஹீர் உசன்(8248999735), அருள்தாஸ்(9943040052) ஆகியோர்கள் உள்ளடங்கிய பறக்கும் படை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணான மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்களுக்கு தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க