February 22, 2021
தண்டோரா குழு
ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பேரூராட்சி மோளப்பாளையம், நாதேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.16.13 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.