• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் பிரிவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் அதிரடி

February 16, 2021 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலை சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் அருகே முத்து கவுண்டன் புதூர் வழியாக திருச்சி சாலையை சென்றடையாளம். இச்சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலை திருச்சி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக உள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

மேலும் சூலூர் பிரிவிலிருந்து குரும்பபாளையம் முத்து கவுண்டன் புதூர் வரை ஏராளமான ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் உள்ளது.இதுதொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் மற்றும் கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு அனுப்பியிருந்தார்.

இதனிடையே நெடுஞ்சாலை துறையினரால் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மேலும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாத வண்ணம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க