• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிஐடியூ அமைப்பினர் முட்டிப்போட்டபடி சென்று மனு அளிக்கும் போராட்டம்

February 16, 2021 தண்டோரா குழு

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ அமைப்பினர் முட்டிப்போட்டபடி சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது 25 க்கும் மேற்பட்டோர் சாலையில் முட்டி போட்டபடி சென்று மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல செய்தனர்.

மேலும் படிக்க