• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிஐடியூ அமைப்பினர் முட்டிப்போட்டபடி சென்று மனு அளிக்கும் போராட்டம்

February 16, 2021 தண்டோரா குழு

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ அமைப்பினர் முட்டிப்போட்டபடி சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது 25 க்கும் மேற்பட்டோர் சாலையில் முட்டி போட்டபடி சென்று மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல செய்தனர்.

மேலும் படிக்க