• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

February 16, 2021 தண்டோரா குழு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் 134 ரன்னில் சுருண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய அணியின் அக்சர் படேல் – 5, அஷ்வின் – 3, குல்தீப் யாதவ் – 2 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் படிக்க