• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2019 க்கு பிறகு திமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது – ஹெச்.ராஜா

February 9, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் யாரும் பீ டீம் இல்லை. அதிமுக – பாஜக ஒரே டீம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்திற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கற்பனையான பாதிப்பை கொண்டு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எந்த நியாயமும் இல்லாமல் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரி பூச வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. 2019 க்கு பிறகு திமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. முன்னுக்கு பின் முரணாக உளறலாக ஸ்டாலின் பேசுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அமமுகவில் தினகரன் இடத்திற்கு வேணாடுமானால் சசிகலா வரலாம் எனவும், சசிகலா வருகையால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தமிழுக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பாஜக தான் எனவும், ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்யாமல், முகமது நபிகளை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமனை கைது செய்தது பாரபட்சமானது எனவும் அவர் தெரிவித்தார். அரசு ஆலயங்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்ற ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் கருத்து சரியானது எனவும், சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். வெள்ளி வேல் கொடுத்திருந்தால் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வாங்கியிருப்பார். பித்தளை வேல் என்பதால் தான் வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜகவின் பீ டீம் அதிமுக என்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்து குறித்த கேள்விக்கு, யாரும் பீ டீம் இல்லை. அதிமுக – பாஜக ஒரே டீம் என பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்ற தேர்தலிலும், தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்கும் எனவும், எங்களது வளர்ச்சிக்கு ஏற்றது போல தொகுதி பங்கீடு இருக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க