• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்

January 29, 2021 தண்டோரா குழு

கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ்கள் பெருமளவில் இயக்கபடாமல் உள்ளது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ கட்டுபடுத்த முடியாமல்இரண்டு ஆம்னி பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பேருந்துக்கு அருகில் மக்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பேருந்துகள் எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க