• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மசினகுடியில் யானை மீது டயரில் தீ வைத்து வீசிய இருவர் கைது !

January 22, 2021 தண்டோரா குழு

கடந்த ஒரு மாதமாக மசனகுடி வனப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது.இதையடுத்து, வனத்துறையினர் யானைக்கு கும்கி யானைகள் மூலம் சென்று மருத்துவக் குழுவுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காயப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.

இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் யானையை முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.

இந்நிலையில் யானை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது அதை டயர் மூலம் நெருப்பு வைத்து துரத்தும் காட்சியும் பின்பு யானையின் மீது அந்த நெருப்பை வீசியதும் யானை காதுப் பகுதியில் மளமளவென பிடித்த தீ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நீலகிரி மாவநல்லா பகுதியில் டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க