• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் SAM பிராஞ்ச் சார்பாக இரத்த தான முகாம்

January 22, 2021 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் SAM பிராஞ்ச் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால், ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர்கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற அவசர நிலை கருதி நாடு முழுவதும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள (SAM) சாம் பிராஞ்ச் சார்பாக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. துணை பொது மேலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் இரத்த தானம் செய்தனர்.

இது குறித்து கிளையின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் கூறுகையில்,

தற்போது கொரோனா தொற்று போன்ற காரணங்களால் இரத்ததானம் செய்பவர்கள் குறைந்துள்ளதால், ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சமூக பொறுப்பை உணர்ந்து எங்களது வங்கி இந்த இரத்ததான முகாமை நடத்துவதாகவும்,வரும் காலங்களில் இந்த சமூக பணியை தொடர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க