• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு

January 20, 2021 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் டெங்கு தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலப்பு பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியார் போன்ற கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.இதில் சிறுவாணியின் மூலம் பெறப்படும் குடிநீர் 20க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு தரப்படுகிறது. இதுபோன்ற பெறப்படும் குடிநீர் மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது.இதனை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘டெங்கு கொசு உற்பத்தியாகமல் இருக்க மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் அபேட் மருந்து கலக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது,’’ என்றார்.

மேலும் படிக்க