• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு

January 20, 2021 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் டெங்கு தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலப்பு பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியார் போன்ற கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.இதில் சிறுவாணியின் மூலம் பெறப்படும் குடிநீர் 20க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு தரப்படுகிறது. இதுபோன்ற பெறப்படும் குடிநீர் மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது.இதனை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘டெங்கு கொசு உற்பத்தியாகமல் இருக்க மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் அபேட் மருந்து கலக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது,’’ என்றார்.

மேலும் படிக்க