• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு – ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட்

January 19, 2021 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (80). இவர் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டிற்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது.

இதுகுறித்து ராஜசேகர் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேஷன் உத்தரவின் பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க