• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

January 13, 2021 தண்டோரா குழு

வருகின்ற சட்டமன்ற தேர்தல் கண்டிப்பாக போட்டியிட உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தொழில் துறை தொடர்பாக 7 வாக்குறுதிகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதில் புத்தாக்கம் மற்றும் புதிய சத்தியக்கூறுகளுக்கு அமைச்சரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

ஐந்தாம் கட்ட பரப்புரையின் போது, மக்களிடம் பேரெழுச்சியை பார்க்கிறோம் எனவும், இது சந்தோஷமாக உள்ளது.மநீமவிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கிடைக்காது என்ற அமைச்சர் கருப்பண்ணன் கருத்து குறித்த கேள்விக்கு, அது அவரது பிரார்த்தனை எனவும், எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது எனவும் பதிலளித்தார்.

கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது எனக்கூறிய அவர்,
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக என பதிலளித்தார். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அது தகவல் தான். நான் சொல்லவில்லை என பதிலளித்தார். பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, வேட்பாளர்களை தகுதி பார்த்து நிறுத்துவோம் என பதிலளித்தார். வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். நாங்கள் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள் கிடையாது. மனித வளத்திற்காக முதலீடு எனவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை தாமதிக்கப்பட்ட நீதியாக பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க