January 13, 2021
தண்டோரா குழு
கோவையில் மார்கழி மாத கடைசி நாளான இன்று ஆண்டாள் வேடமிட்டு பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
மார்கழி மாதம் என்றாலே மக்கள் விரதம் இருந்து அதிகாலை எழுந்து நீராடி ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.அதன்படியே தெருக்களில் பஜனை செய்து வருவது வழக்கத்தை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பழங்கால நடைமுறையை ஒட்டி மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் ஊர்வலங்கள் தொடங்கின.அந்த வகையில் மார்கழியின் கடைசி நாளான இன்று கோவை ஆலந்துரை முதல் பூலுவப்பட்டி வரை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் மற்றும் பாஷியகார அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு மங்களம் தரும் மார்கழி நோன்பு திருப்பாவை ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர் கோவிலின் வளாகத்தில் குழந்தைகள் ஆண்டாள் வேடமிட்டு பஜனைகள் பாடியபடி நடனமாடினர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சென்டலங்கார ஜீயர் மற்றும் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் தலைவர் சுரேஷ் பாரதி , பேரூர் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் உட்பட குழந்தைகள்,பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பாவை பாடினர்.