• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மார்கழி மாத கடைசி நாளான இன்று ஆண்டாள் வேடமிட்டு பஜனை ஊர்வலம்

January 13, 2021 தண்டோரா குழு

கோவையில் மார்கழி மாத கடைசி நாளான இன்று ஆண்டாள் வேடமிட்டு பஜனை ஊர்வலம் நடைபெற்றது.

மார்கழி மாதம் என்றாலே மக்கள் விரதம் இருந்து அதிகாலை எழுந்து நீராடி ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.அதன்படியே தெருக்களில் பஜனை செய்து வருவது வழக்கத்தை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பழங்கால நடைமுறையை ஒட்டி மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் ஊர்வலங்கள் தொடங்கின.அந்த வகையில் மார்கழியின் கடைசி நாளான இன்று கோவை ஆலந்துரை முதல் பூலுவப்பட்டி வரை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் மற்றும் பாஷியகார அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு மங்களம் தரும் மார்கழி நோன்பு திருப்பாவை ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர் கோவிலின் வளாகத்தில் குழந்தைகள் ஆண்டாள் வேடமிட்டு பஜனைகள் பாடியபடி நடனமாடினர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சென்டலங்கார ஜீயர் மற்றும் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் தலைவர் சுரேஷ் பாரதி , பேரூர் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் உட்பட குழந்தைகள்,பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பாவை பாடினர்.

மேலும் படிக்க