• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 95 சதவீதம் பொங்கல் பரிசு விநியோகம் – அதிகாரிகள் தகவல்

January 12, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 95 சதவீதம் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரூ.2,500 பணம், முந்திரி, திராட்சை, ஏலாக்காய், கரும்பு, சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது.மாநிலம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 69 ஆயிரத்து 715 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரத்து 60 ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 460 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவர்கள். இவர்கள் தவிர கடந்த ஆண்டு ரேஷன்கார்டு கேட்டு 17 ஆயிரம் பேர் புதிதாக விண்ணப்பித்து இருந்தனர். இதில் பலருக்கு ஸ்மார்ட் கார்டு அச்சடிக்குப்பட்டு விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது.

மேலும் சிலருக்கு ரேஷன்கார்டு கிடைக்காமல் உள்ளனர்.இவர்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 69 ஆயிரத்து 715 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இது 95 சதவீதமாகும்.மீதம் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும். யாருக்காவது பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கவில்லை என்றால் அதுகுறித்து புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க