• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதிய அரசு பேருந்து

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தடாகம் பகுதி இந்திரா நகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்திற்குள்ளனது.

கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது சின்னதடாகம் இந்திரா நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பாலத்தில் திரும்பும் போது ஓட்டுநர் பிரேக்கை செலுத்தியுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் பேருந்தை விட்டு குதித்துள்ளார்.ஓட்டுனர் இல்லா பேருந்து மரத்தில் மோதி சற்று திரும்பியதில் மண்ணின் இடித்து நின்றதாகவும் கூறப்படுகிறது.

விபத்திற்குள்ளான பேருந்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 15க்கும் குறைவான பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். முதலுதவிக்காக பேருந்தின் ஓட்டுநர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரேக் பிடிக்காத பேருந்தால் விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க