• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முன்னாள் மாணவர்களின் 50_வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் முன்னாள் மாணவர்களின் 50_வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் சிட்டி முனிசிபல் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1971_ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் 50″வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது.இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல ஆண்டுகளின் தொடர் நட்பு குறித்து பரிமாறிக்கொண்டதுடன் தொடர்ந்து பாடல்கள் பாடியும்,நட்பு கவிதைகள் கூறியும் மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய பாலசுப்பிரமணியன்,

இப்போது உள்ள மாணவர்கள் அனைவரும் கணிணி வழியில் படிக்கிறார்கள் ,ஆனால் நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது புத்தகத்தை பார்த்தும்,சொல்லின் வாயிலாகவும் படித்ததாக கூறினார். அதே போல் இப்போது படிக்கும் மாணவர்கள் எங்களை போல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நட்பை வளர்த்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க