• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹெரன்பாலுக்கு 2 நாட்கள் சிபிஐ காவல்

January 11, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான ஹேரன்பாலிடம் 2 நாள் கஷ்டடியில் விசாரிக்க கோவை கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து,ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்கள் நடந்து வந்தன. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தற்போது இந்த பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சில ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க. முன்னாள் நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரேன் பால் ஆகியோரை கடந்த 5-ந் தேதி கைது செய்தனர். 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நந்தினி தேவி 20-ந்தேதி வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான அருளானந்தம் உள்பட 3 பேரையும் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, கோவை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை கோபி சிறையில் இருந்து பாலியல் வழக்கு குற்றவாளி ஹெரான்பாலை மட்டும் சிபிஐ அதிகாரிகள் கோவை மகிளா கோர்ட் அழைத்து வந்து 5 நாள் கஸ்டடியில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி ஹெரன்பாலிடம் இரண்டு நாள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து இவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில், இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க