• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா

January 8, 2021 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

கோவையை கொண்டாடும் வகையில்13வது கோவை விழா கடந்த ஜனவரி 2 தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய பண்பாட்டு விழா என்ற பெயரில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் தோரணங்கள் கட்டியும், ரங்கோலி கோலமிட்டும், கரும்புகள் வைத்தும் மண்பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில்,

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை சந்தித்து கல்லூரியில் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

கல்லூரிப் பேராசிரியர்கள் கூறுகையில்,

கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான மாணவிகளை கொண்டு பொங்கல் விழா நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க