January 1, 2021
தண்டோரா குழு
பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்தில் கிடந்த காகிதங்களை எடுத்து மூன்று வயது சிறுமி குப்பை தொட்டியில் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாபு அவரது குழந்தை புகழ்யா(3) வுடன் நேற்று தாராபுரம் சென்று கொண்டிருக்கையில் பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.அப்போது அவருடனே சென்ற குழந்தை புகழ்யா ஏடிஎம் வளாகத்தில் கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அருகில் இருக்கும் குப்பை தொட்டிக்குள் போட்டுள்ளார். இதனை குழந்தையின் தந்தை பாபு அவரது செல்போனில் பதிவு நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி குழந்தை புகழ்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குழந்தை தான் ஏதும் சொல்லாமலே இவ்வாறு செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று குழந்தையின் தந்தை தெரிவித்தார்.பெரும்பாலான ஏடிஎம் வளாகங்களில் குப்பை தொட்டிகள் இருந்தும் பெரியவர்கள் கூட காகிதங்களை குப்பை தொட்டிக்குள் வீசாமல் செல்லும் போது மூன்று வயது குழந்தை அந்த காகிதங்களை எடுத்து குப்பை தொட்டிக்குள் போட்டு சுத்தம் செய்தது காண்போரை புன்னகைக்க வைக்கிறது.