• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பறை திறப்பு

December 31, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மெய்நிகர் வகுப்பறையினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது:

இப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பு துவங்கப்படுவது சிறப்பான நிகழ்வாகும். இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர் தொழில் நுட்பத்துடன் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கருவியில் பாடப்பொருள் சார்ந்த ஒளிப்பதிவுகள், பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. அறிவியலில் மனித உடல் உள்ளுறுப்புகள், தாவர விலங்கு செல்களின் அமைப்பு, மனித மூளையின் பாகங்கள் என அனைத்து பாடங்களும் நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடப்பொருளானது மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க