• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு குழுமம், சிபிளாஜ் இன்போடெக் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

December 31, 2020

காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்பது பூமியில் உள்ள எல்லா உயிருக்கும் பொதுவான பழமொழி. மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. மாணவர்களின் பாதுகாப்புக்காக நேரு சர்வதேச பள்ளி, மணிமகுடமாக புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

நேரு சர்வதேச பள்ளி, சென்னையில் உள்ள பிளாஸ் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் (CBLAZE Infotech Pvt., Ltd.) இணைந்து முழுமையான பள்ளி மோலண்மை தீர்வுகளை (இஆர்பி), ஆர்எப்ஐடி தொழில்நுட்பத்தில், மாணவர்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிக்க புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் .பி.கிருஷ்ணக்குமார் முன்னிலையில், சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பி.சென்னகேசவன் மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க