• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு குழுமம், சிபிளாஜ் இன்போடெக் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

December 31, 2020

காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்பது பூமியில் உள்ள எல்லா உயிருக்கும் பொதுவான பழமொழி. மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. மாணவர்களின் பாதுகாப்புக்காக நேரு சர்வதேச பள்ளி, மணிமகுடமாக புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

நேரு சர்வதேச பள்ளி, சென்னையில் உள்ள பிளாஸ் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் (CBLAZE Infotech Pvt., Ltd.) இணைந்து முழுமையான பள்ளி மோலண்மை தீர்வுகளை (இஆர்பி), ஆர்எப்ஐடி தொழில்நுட்பத்தில், மாணவர்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிக்க புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் .பி.கிருஷ்ணக்குமார் முன்னிலையில், சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பி.சென்னகேசவன் மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க