• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழை

December 31, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று அதிகாலையில் இருந்தே மேகமூட்டத்துடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அதே போல பனிப்பொழிவின் தாக்கமும் இம்மாதம் அதிகமாகவே காணப்பட்டது.

இந்நிலையில், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து கன மழையாக மாறியது. வியாபாரிகள் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆங்காங்கே தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

திடீர் கனமழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க