• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழை

December 31, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று அதிகாலையில் இருந்தே மேகமூட்டத்துடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அதே போல பனிப்பொழிவின் தாக்கமும் இம்மாதம் அதிகமாகவே காணப்பட்டது.

இந்நிலையில், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து கன மழையாக மாறியது. வியாபாரிகள் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆங்காங்கே தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

திடீர் கனமழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க