• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை ஆட்சியர் அறிவிப்பு

December 30, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை, விதிமுறைகளை மீறும் ஓட்டல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த அதிக வீரியம் கொண்ட கொரோனா பரவி வருகிறது. எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு ஆணைப்படி கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. இதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல சாலைகள், தெருக்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. அரசின் இந்த விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகா அளவிலும் சப்-கலெக்டர் தலைமையில், தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க