• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டம்

December 30, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகத்தில் இருந்து நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, வேளாண் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் வேளாண் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண்மை பல்கலைகழகத்தில் 200 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 2014 ம் ஆண்டிற்கு பிறகு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வேளாண் முனைவர் பட்டதாரிகளை பணிக்கு எடுக்காமல், அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களை நிரமிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் 1700 க்கும் மேற்பட்ட வேளாண் முனைவர் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும், பல்கலைகழகம் இம்முடிவை கைவிட்டு வேளாண் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்கலைகழக முதன்மையரிடம் மனு அளித்துள்ள வேளாண் முனைவர் பட்டதாரிகள், தொடர்ந்து பல்கலைகழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க